Thursday 10 March 2011

நினைத்தாலே நெஞ்சு பதறும் மர்மம்


                                                     இதயம் பலகீனம் உள்ளவர்கள்  இந்த கதையை படிக்க வேண்டாம். அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப் பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை . மேலும் இது முழுக்க முழுக்க  கற்பனையே .(உண்மையா ?)

காலை நேரம் கூவும்  சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில்  விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என அவனுக்கு தெரியாது. அவனுடைய வாழ்க்கையில் துயரம்   அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
 சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் .அவனுக்காகவே  காத்திருந்தது போல்கருப்பு  நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது. 

                                                                                                                 ஆட்டோ ஆட்டோ stand ல்  போய்நின்றது .மூர்த்தி  காகவே  காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் வந்து  தம்பி  காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே, என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும்    மூர்த்தி ன் கைகளை இருக பற்றி, டே ! உள்ள வாடா, என இழுக்க, மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு  செய்தான் மூர்த்தி.ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான். பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே! ஒழுங்கா உண்மையை சொல்லு , அந்த  பொண்ண கடத்தி  என்ன செய்தாய், அந்த  பொண்ணு உயிரோட இருக்கா ? இல்லை 
கொன்னுட்டியா?

        மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி, சார், என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை.
பளார்னு ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது.மூர்த்திக்கு பொறி கலங்கியது  போல் இருந்தது .

டே! உன்னைபோல் எத்தனை பேரை பாத்திருப்பேன், டே! போன வருஷம்
 உன்னோட வீட்டுக்கு வந்த லலிதான்கிற  பொண்ணு அவளோட வீடு போய்
சேரலை. உண்மைய சொல்லு. பொண்ணு எங்கடா? மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .

           சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு  போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு. நான் அம்மாகிட்ட ஏம்மா, இது யாருன்னு கேட்டப்ப, பாவம் இந்தபொண்ணு.  avalai avunga    வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம். அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு  வேலை பாக்குறேன், எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு. யாரும்மா கூட்டிகிட்டு  வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன். அம்மா சொன்னங்க, வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு, அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்துசாப்பாடு கொடுக்க சொன்னான். சாப்பிட்டதும்  பக்கத்து 
வீட்டுக்கு, வீட்டு  வேலைக்கு,  ஆள்  வேணுமுன்னு சொன்னங்க. அங்க கொண்டு  போய் விட்டுருவேன்.  நீ சாப்பிட்டு கிளம்புடா  அப்புடின்னு அம்மா சொன்னாங்க .


போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச,     

டே! இங்க வா என மூர்த்தி யை  அழைத்து, நான் சொல்லுற மாதிரி எழுது, சார் சொல்லுங்க, நான் பத்து நாட்களுக்குள் லலிதா என்ற பெண்ணை கொண்டு வந்து  ஸ்டேஷன் நில்   ஒப்படைக்கிறேன். 

அய்யா, அந்த பொண்ணு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.
அப்புடி இல்லைன்ன, யோவ் ஏட்டு,

இவன் ஆட்டோவை சீஸ் பண்ணி உள்ள வையா. 

மூர்த்தி அரண்டுபோனான். 

சார் நீங்க சொல்லுறபடி எழுதி தரேன். 

அதே போல அடுத்த வாரம் விசாரணைக்கு எங்க ஊர்  sp calculator கனகாம்பரம்
அய்யாவ ஆபீஸ்ல வந்து சந்திக்கணும் .

மூர்த்தி மனது படபடத்தது ,ஸ்டேஷன் ஐ விட்டு மூர்த்தி புறபட்டான் ,அவனின் மனது காலையில்
 அவன் ஆட்டோவை   கிராஸ் செய்த பூனை தான் அவன் கண் முன்னே தோன்றியது
மூர்த்திபோலீஸ் ஸ்டேஷன் இல் இருந்து புறப்பட்ட, தனக்கு  வேண்டியவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி புலம்பினான் .காவலர்கள் சொன்ன தேதியில், தான்  விசாரணைக்கு செல்ல lawer  ஐ சந்தித்தான்  .ஒன்னும் கவலை படவேண்டாம் தம்பி நான் பாத்துகிறேன் ,குறிப்பிட்ட தேதியில் அந்த ஊர் sp யை பாப்போம் .நீங்க அதற்க்கு வேண்டிய ஏற்பாடை செய், கொலை செய்ற கொலைகராங்கலையே நான் காப்பத்துவேன் ஒன்னும் பயப்பட வேண்டாம் புறபடு. 



நல்ல பக்க பலத்தோடு, குறிப்பிட்ட ஊர் நோக்கி, குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் தான்
மிஞ்சியது. காரணம் அன்று அந்த அதிகாரி சென்னை ஹை கோர்ட்   சென்றிருந்தார்.


என்னடா இன்னும் எழரை     ஆரம்பம் ஆகலைன்னு படிக்கிற வாசகர்கள் கேட்கலாம்
 




இரண்டுநாள் கழித்து குறிப்பிட்ட அதிகாரிய சந்திக்க முடிவெடுத்தாங்க.அன்றைக்கு இரவு மணி எட்டு இருக்கும். நண்பர்கள் எல்லாம் வரகூடிய இடத்தில் மூர்த்தி காத்திருந்தான் .


ஆனா அவனோட மனசு ஏனோ திக் திக் என்று அடித்தது .ராஜனும் ,பீட்டர்  ரும் வழக்கமா வரவேண்டிய அந்த புதிதாய் கட்டி கொண்டு இருக்கும் கட்டிடம் முன்னால் குமிக்கப்பட்டிருக்கும் மணலில் படுத்திருந்த மூர்த்தி யிடம் ,டே என்னடா, ஆள் ஒரு மாதிரியா படுத்திருக்க .
ஒன்னும் இல்லை நண்பா. எங்க அம்மா படிக்காதவங்க. அது போன வருஷம் செஞ்ச ஒரு முட்டாள் தனத்தாள் என்னைய போலீஸ் விசாரணைக்கு வர சொல்லுது .

நண்பா பீட்டர் எனக்கு ஒரு உதவி செய்வியா? சொல்லு மூர்த்தி. என்ன செய்யணும். உண்மைய சொல்லு, என்ன உதவி வேண்டுமானாலும்  செய்யுறேன்  .

நாளைக்கு காலைல காஞ்சிபுரம் போய் sp  யை பார்த்து விசாரணையை முடிக்கணும் எதாவது வண்டி ஏற்பாடு செய் .

மூர்தியை பார்த்து ராஜன் கேட்டான். டே அப்பா! என்ன விசாரணை ஏன் உன்னோட கண்ணு கலங்குது, நீ எதுவும் தப்பு செய்யலை இல்ல .
இல்லைடா. எங்க அம்மா பசின்னு வந்த ஒரு பொண்ணுக்கு சாப்பாடு போட்ட ஒரே குற்றத்துக்காக  அந்த பொன்னை நான் 
கடத்தி வித்துட்டதா போலீஸ் மிரட்டுறாங்க .என சொல்லி ஓவென அழுதான் 
ஒன்னும் பயப்படாதே நாங்களும் உன்னோட நாளை காலை விசாரணைக்கு 
வரோம். எனக்கு வேண்டியவர் டாட்டா சுமோ வாடகைக்கு விடுறார் .நாளைக்கு 
எல்லோரும் காஞ்சிபுரம் நோக்கி போவோம் என்றான் பீட்டர்.

அதிகாலை  எழுந்து மூர்த்தி மற்றும் அவனது தந்தை மற்றும் அவனது அண்ணன் எல்லோரும் குளித்து காலை  உணவைமுடித்து ரெடியாக 
இருந்தார்கள் .டாட்டா சுமோ ராஜன் விட்டின் முன்னே 
எழரை மணிக்கு நின்றது .மூர்த்தி கல்லூரியில் இளங்கலை பயின்றவன் .காலத்தின் சூழ்நிலை வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலை இவ்வாறாக மனதில் நினைத்தபடி சுமோ வின் உள்ளே ஏறி அமர்ந்தான் ராஜன். வண்டியில் ஏற்கனவே பீட்டர் அமர்ந்திருந்தான் .என்ன பீட்டர் வண்டி எங்க போகணும் டீஸல் போட்டியா இல்லையா?


பீட்டர் பதில் சொல்லும் முன்னே டிரைவர் முந்தி கொண்டு  டீஸல் ஏற்கனவே போட்டாச்சு ,இப்ப எங்க போகணும் சொல்லுங்க என்றான் . பாவம் அந்த டிரைவர் ரொம்ப அவசரமாகவும் ஆர்வமாகவும் இருக்கான் ,அவனுக்கு தெரியாது இந்த சவாரி அவன் வாழ்க்கையை ரொம்ப பாதிக்கும் என்று .


பாவம்! வண்டி சவாரி போனதும் சாயந்தரம் வந்திடும் என நம்பி, அடுத்தசவாரிக்கு பேசிகிட்டு இருந்தார் அந்த வண்டியோட உரிமையாளர் .

வண்டி புறப்படும் போதே வண்டியின் குறுக்கே பன்றி வேக மாக ஓடியது. 

 வண்டிமூர்த்தி வீட்டை அடைந்ததும் ,வண்டியில்மூர்த்தி அப்பா ,அண்ணன் மூர்த்தி யோட தங்கச்சி வீட்டுக்காரர், பக்கத்துக்கு வீட்டுகாரர் எல்லோரும் 
வண்டியில் அமர வண்டி travellers பங்களா முன் செல்லும் போது எதிரில்
 மூர்த்தியைஇன்று விசாரணைக்கு வர சொன்ன  போலீஸ் காரர் ஒருத்தருடன் மேலும் இரண்டுபேர் நிற்க, வண்டிய நிப்பாட்டு ,என மூர்த்தி சொல்ல வண்டி ஓரங்கட்டப்பட்டது .
மூர்த்தி வண்டிய விட்டு இரங்கி காஞ்சிபுரம் போலீஸ் காரரை அழைக்க மூர்த்தியை பார்த்ததும் ,அந்த காவலர் அவருடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தாண்டவனிடம் ஏதோ காதில் சொல்ல .சார் நாம யாரை அர்ரெஸ்ட் பண்ண வந்தோமோ அந்த 
குற்றவாளி  இவன்தான் என்று முனுமுனுக்க ,மூர்த்தி அருகில் வந்த இன்ஸ்பெக்டர் தம்பி, சார் தான் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ,அப்புறம் நான்தான் SI தாண்டவன். தம்பி,என்ன வண்டியெல்லாம் எடுத்துகிட்டு 
எங்க போறிங்க  என கேட்க, .சார் இன்னைக்கு விசாரணைக்கு வர சொன்னங்க. அதான் வண்டி எடுத்துக்கிட்டு புறப்படுகிறோம் .தம்பி, வண்டியில் தேவை இல்லாத ஆட்களை இறகிடுங்க என்று இன்ஸ்பெக்டர் குற,  அய்யா எங்க வீட்டுக்கு வண்டிய விடுறோம் .எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில்தான் அந்த பொண்ணு ஒரு நாள் தங்கி இருந்தது. தயவு செய்து அங்க வந்து விசாரணை செய்யவும்


கடவுளே என்ன  நடக்கப்போகுது
 தொடரும்

Wednesday 2 March 2011

பழ மொழியின் விளக்கம்

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா,இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடி போலாமா !நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கிற காலம் இப்புடித்தான் இருக்கு. ஆனா பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் திருமணம் என்றால்,புரோக்கர் உதவியோடதான் செய்வாங்க.காரைக்குடியில் வசிக்கிற வள்ளியம்மை ஆச்சி தன்னோட மகனுக்கு ஒரு வரன் வேணும் என்று சொல்ல, புரோக்கர் ஆச்சியை பார்த்து பையன்னோட விவரம் சொல்லுங்க,அப்புறம் உங்களுடைய  மகனுக்கு பார்க்கிற பொண்ணு  எப்புடி இருக்கனும் சொல்லுங்க ஆச்சி.என்றார் தரகர். அதுக்கு ஆச்சி என்ன சொன்னாக
தெரியுமா. படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க. தரகருக்கு தலை சுத்திருச்சு.என்னடா இது ஆச்சி என்ன சொல்லுறாங்கன்னு ஒன்னும் புரியாம தரகர்,ஆச்சி உங்க பையன பத்தி சொல்லுங்க,
ஏன்னா பொண்ணு வீட்டுல விவரம் சொல்லணும்,என்று சொன்ன தரகருக்கு ஆச்சி
சொன்ன பதில் என்ன தெரியுமா.யோவ் தரகரே உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டான் என்னோட பையன்.அவனுக்குதான் படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க.தரகர் குழம்பி
போயி ஆச்சியும் வேணாம் அவுங்களோட சவகசமும் வேணாம் சாமீன்னு ஒரே
ஓட்டமா ஓடிப்போனவர் எங்க நின்னாருன்னு பார்த்த அந்த ஊரில் உள்ள ஒருசாமியாரோட குடில் வாசல் வந்துதான் நின்றார்.  தரகர் சொன்ன தகவலை  கேட்ட சாமியார் அதனுடைய விவரத்தை சொன்னார்.
தலை தெறிச்சு வந்த தரகரை பார்த்து சாமியார் சொன்ன பதில்.கல்யாணம் பண்ணி
கூட்டி  கிட்டு வருகின்ற மருமகள் நைட் பாயை விறுச்சு படுத்த பின்னர் ,மாமியார் ஏம்மா மத்தியானம்
மாடியில் காய போட்ட வடகத்தை எடுத்தாச்சா ?, அத்தை எல்லாம் அப்பவே எடுத்தாச்சு
அத்தை. ஏம்மா மீதம் உள்ள பாலை உரை ஊத்தியாட்சா?  அப்பவே ஊதியாச்சு அத்தை.
ஆமா மாடி மேல  துணி காய போட்டியே எடுத்தாட்சா  ?  எடுத்தாச்சு அத்தை . இப்புடி மாமியார் கேட்கின்ற கேள்விக்கு படுத்த பாயை விட்டு எழாமல் பதில் சொல்லும் சமத்தான மருமகள் தான் தனக்கு வேணும்முன்னு ஆச்சி சொல்லி இருக்காங்க.
தரகர் தன்னோட இன்னொரு குழப்பத்தையும் சொல்லி அதற்கும் விளக்கம் கேட்டார் . தன்னோட மகனை பத்தி சொல்லும் பொழுது உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எளுந்திருக்கமாட்டன் அப்புடீன்னு சொன்னகளே அதுக்கு என்ன
அர்த்தம் சாமியாரே ?அதாவது உயர் பதவியில் உள்ளவங்க யாருக்ககாகவும்  
எழுந்து நின்னு பதில் சொல்ல தேவை இல்லை, தன்னோட மகன் பெரிய வேலையில் இருக்கிறதா ஆச்சி சொல்லி இருக்காங்க.இது எப்புடி இருக்கு ?

பழிக்கு பழி



ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அந்த பாட்டிக்கு ஒரு மகன் ஒருத்தன் இருந்தான், பாட்டிக்கு வாய்ச்ச மருமகள் சரியான கோபக்காரி, தன்னோட கணவர் இருக்கும் நேரத்தில் மட்டும் மாமியார்கிட்ட அன்பா இருக்கின்ற மாதிரி நடிப்பா,தன்னோட கணவன் வெளியில் சென்றதும் மாமியாருக்கு  சாப்பாடு கொடுக்க மாட்ட. வீட்டின் உள்ளே இருக்காதே என மாமியாரை மாட்டு தொழுவத்தில் தான் படுக்க அனுமதிப்பா,சாப்பாடும் நாயோட தட்டில் தான் . பாட்டி தன்னோட நிலை கண்டு வருந்தி ஒரு முடிவு எடுத்தாள்.மருமகளோட சண்டை போட்டு தன்னோட இந்த நிலையை சரிசெய்ய முடியும் என தீர்மானம் செய்தாள். வழக்கம்போல் கிழவியோட மகன் வீட்டை விட்டு வெளியில் சென்றதும்,மருமகள் கிழவியை மாட்டு தொழுவத்திற்கு போக சொன்னாள்  ஆனால் கிழவி போடி இது என்னோட வீடு நீ வேண்டுமானால் வெளியில் போ என கிழவி மறுக்க .கோப முற்ற மருமகள் வீட்டின் உள்ளே கிடந்த பெரிய உலக்கை யை எடுத்து கிழவியின் தலையில் அடிக்க கிழவி தரையில் சரிந்தாள். மாமியார்  இறந்து விட்டாள் என கிழவியின் மகனுக்கு செய்தி சொல்லி அனுப்ப, மகன் வந்ததும் உடனே கிழவியை,மகனும் மருமகளுமாக சேர்ந்து பக்கத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார்கள் .

கிழவியின் உடம்பின் மேல் விறகுகளை அடுக்கி தீயை மூட்டலாம் என பார்த்தால் ரெண்டுபேருமே தீ பெட்டி எடுத்து வர மறந்து விட்டனர் .உடனே கணவன் நான் போயி தீப்பெட்டி எடுத்து வருகிறேன் நீ இங்கே இரு என மனைவியிடம் சொல்ல ,நான் மட்டும் எப்புடி இங்க தனியாக இருக்க முடியும் நானும் உங்களோட வீட்டுக்கு வரேன்னு சொல்லி அவளும் அவனோட புறப்பட்டாள்.உண்மையில் கிழவி சாகவில்லை கிழவி மயக்கத்தில் இருப்பது யாருக்கும் தெரியாது ,திடீரென கிழவிக்கு சுய நினைவு வர தன் மீது அடுக்கி வைத்திருந்த விறகுகளை தள்ளி கிழவி எழுந்து பார்த்தாள்.தன் இருப்பது சுடுகாடு என  உணர்ந்து அருகில் உள்ள கோவிலை நோக்கி ஓடினால் அங்கே சென்று கோவிலில் உள்ள சிலையின் பின்னே அமர்ந்தாள். வீட்டுக்கு போன மகனும் மருமகளும் தீப்பெட்டி எடுத்து வந்து கிழவி உள்ளே இருப்பதாக எண்ணி நெருப்பை மூட்டினான் . கோவில் உள்ளே இருந்த கிழவி மெதுவாக எழுந்து நிற்க முயல தீடிரென நான்கு திருடர்கள் கோவில் உள்ளே வர கிழவி நிலையை உணர்ந்து சிலையின் பின்னே மறைவாக அமர ,உள்ளே வந்த திருடர்கள் காளி சிலையை நோக்கி அம்மா நாங்கள் கொள்ளை அடித்து வந்த பணத்தை இன்று இரவு இங்கே வைக்கலாமா உத்தரவு தாருங்கள் என கேட்க,சிலையின் பின்னால் அமர்ந்திருந்த கிழவி தன்னோடைய வாயால் ச் ச்ச்   என பல்லியை போல் சத்தமிட திருடர்கள் ஆக சரியான சகுனம் என அவர்கள் கொண்டுவந்த நகையை  கோவில் உள்ளே வைத்தனர், காளியை நோக்கி தாயீ இன்று வடக்கு திசை நோக்கி திருடலாமா   ?  என உத்தரவு கேட்க சிலையின்  பின்னால் அமர்ந்திருந்த கிழவி மீண்டும் பல்லி போல் சத்தமிட,    திருடர்கள் சரியான சகுனம் என்று குறி திருட சென்று விட்டனர் .சிலைக்கு பின்னால் அமர்ந்திருந்த கிழவி இதுதான் சமயம் என்று திருடர்களிடம் இருந்த நகைகளை அபேஸ் செய்து கொண்டு தனது இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.கிழவி தன்னுடைய வீட்டிற்கு அதிகாலை நேரம் சென்று அடைந்தாள் . வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டு மருமகள் கதவை திறக்க கிழவியை பார்த்ததும் மயங்கி கீழே  விழுந்தாள்.அவள் போட்ட சத்தத்தில் கிழவியின் மகன்  படுக்கையை விட்டு எழுந்தான். கிழவி உயிருடன் இருப்பதை கண்ட மகன் அம்மா எப்புடிம்மா உயிருடன் வந்தாய் ,என கேட்க , கிழவி ,மகனே நீ என்னை எரித்தவுடன் மேலோகம் சென்றேன் , அங்கு என்னுடைய அம்மா அப்பா ,எனக்கு தேவையான நகைகளையும் பணத்தையும் கொடுத்து என்னை திருப்பி அனுப்பினர் ,இதோ பார் நகை ,மற்றும் பணம் என தான் கொள்ளையரிடம் கொண்டு வந்த தங்கத்தை மகனிடம் காட்ட ,கிழவி சொன்னதை கேட்ட மருமகளுக்கு ஒரு யோசனை தோன்றியது , உடனே தன் கணவனை நோக்கி நாளை என்னை கொண்டு போயி சுடுகாட்டில் வைத்து  எரித்து விடுங்கள் ,நானும் என் அம்மா அப்பா விடம் நகை மற்றும் பணம் வங்கி வருகிறேன் என்று தன் கணவனிடம் சொல்ல ,அவனும் அதை ஏற்று அவளை சுடுகாட்டிற்கு அழைத்து செல்ல கிழவியும் உடன் சென்றாள் .  மருமகளை படுக்க வைத்து அவள் மேல் கட்டை களை அடுக்கி தன் மகனிடம் தான் மறக்காமல் கொண்டு வந்த தீ பெட்டியை கொடுத்தாள்.மகனும் தன் மனைவி மேல் நெருப்பை மூட்டினான்  .கிழவி சாமர்த்தியமாக தன்னை மதிக்காத மருமகளை தானே முன்வந்து சாகும்படி செய்து விட்டாள் .

நமக்கு ப்ளூ கிராஸ் இருக்கே !


 

பெண் நாய் 1 :  ஏய் பப்பி நகராட்சியில இருந்து நம்ம புடிக்க ஆள் வரானுங்க ஓடிடு .

பெண் நாய் 2 :     அவுங்க நம்மள புடிக்க மாட்டாங்க


பெண் நாய் 1 : நமக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யுறதுக்கு அரசாங்கத்துல பல லட்சம் நகராட்சிக்கு ஒதுக்கி இருக்குறாங்க அதுல ஆண் நாய்க்கு  மட்டும் தான் கருத்தடை ஆபரேஷன் பண்ணுறாங்களாம் நமக்கு பண்ணுனா செலவு அதிகமாம் ,மேலும் அது கஷ்டமான வேலையாம் .

பெண் நாய் 2 :       அப்ப நம்ம இனபெருக்கம் செய்ய வழி இல்லையா


பெண் நாய் 1 : நகரத்தை ஒட்டின பஞ்சாயத்து பகுதிக்கு போக வேண்டியது தான் . இது தேவையா ? எப்புடியும் நம்ம இனத்தை ஒழிக்க முடியாது நம்ம பேரை சொல்லி அதிகாரிங்க கொள்ளை அடிக்குரானுங்க .
நமக்கு இருக்கிற பாதுகாப்பு மனிதர்களுக்கு கிடையாது.நமக்கு ப்ளூ கிராஸ் இருக்கே .

( ஆபரேஷன் செய்யப்பட்ட ஆண் நாய் நகராட்சி அதிகாரியை பரிதாபமாக பார்த்தது .)

எவ்வாறு வாழவேண்டும்.


 

ஒரு மனிதன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என தெரிந்து கொள்வோம் .
  ஓர் எட்டில் பயிலாத பழக்கம்
  ஈர் எட்டில் கல்லாத கல்வி
 மூவெட்டில் ஆகாத திருமணம்
  நால் எட்டில் பெறாத குழந்தை
ஐந்தேட்டில் சம்பாதிக்காத    சம்பாத்தியம்
ஆறேட்டில்
செய்யாத செலவு
ஏல் எட்டில் செல்லாத யாத்திரை
எட் ஏட்டில் சாகாத  சாவு

இவை யாவும் பயனற்று போகும்
அதாவது ஒரு மனிதன் தன்னுடைய 8 வயதிற்குள் நல்ல பழக்கங்களை பயின்று இருக்கவேண்டும் .16 வயதிற்குள் கல்வி பயின்று ,24 வயதிற்குள் திருமணத்தை முடித்திருக்க வேண்டும்,32 வயதிற்குள் குழந்தை பெற்றிருக்க  வேண்டும் . நாற்பது வயதிற்குள் சம்பாதித்து ,48 வயதிற்குள் தான் சம்பாதித்த சம்பாத்தியத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான மற்றும் தனக்குள்ள கடமைகளை முடித்திருக்க வேண்டும்.56 வயதில் செல்ல வேண்டிய கோவில் குளங்கள் யாத்திரை இவை யாவையையும் முடித்திருக்க வேண்டும் .அதே போல் 64 வயதிற்கு மேல் இந்த பூமியில் வாழக்கூடாது .மேற்கண்டவைகளை உரிய காலத்தில் முடிக்கவில்லை எனில் இவை யாவும் வீணாகும் . 
(மேற் கண்ட வற்றில் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் )

just comment

ஆடுகளம்


கிராம மக்களின் பொழுது போக்குகளில் ஒன்றான சேவல் சண்டையை மையமாக கொண்ட படம் தான். ஆடுகளம்,ஆழகான கதா  நாயகியை ஒரு சில பாடல்களில் மட்டுமே அவருக்கு முக்கிய துவம் கொடுத்து,குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால்,படம் முழுவதுமே சேவல் சண்டை தொடர்பாக இருந்ததே தவிர நடிகை டாப்சியை முற்றிலும் பயன் படுத்தவில்லையே என்ற ஏக்கம் படம் பார்பவர்களுக்கு இருக்கும் .  .நாயகன் தனுஷ் க்கு ஆடுகளம்,சிறந்த வெற்றிக்களம்,என்று தான் சொல்லவேண்டும் .பாடல் யாத்தே !யாத்தே மிக அருமை. படம் பார்த்து விட்டு  வெளியில் வருவோர் காதுகளில் எல்லாம் யாத்தே !யாத்தே !பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். அவ்வளவு  அருமையான பாடல் .கதையின் அம்சம் என்னவென்றால் சேவல் சண்டைக்கு சேவல்களை தயார் செய்து, களத்தில் விடுவது,  அதில் மிகுந்த கில்லாடி பேட்டைகாரர். அவருடைய அணிக்கும் எதிர் அணிக்கும் நடக்ககூடிய சேவல் சண்டையில் வெற்றி  பெறுவது பேட்டைகாரர்  அணிதான்.பேட்டைகாரர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் தான் தனுஷ் . தனுஷ் நடிப்பு படு சூப்பர் !கதை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். சண்டை காட்சி அற்புதம், அழகான நாயகி ,பார்க்க வேண்டிய படம்,தனுஷ் நடிப்பு அட்டகாசம்.
பொது இடத்தில் வெட்டப்பட்ட இரண்டுகைகளுடன் ஆரம்பம் ஆகும் யுத்தம் செய்
படம் சேரனுக்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும். கதை அருமை படம் விறுவிறுப்பாக இருக்கிறது. சேரன் நடிப்பு அருமை ,ஒரு சில இடங்களில் சேரன் நடிப்பு டாப்.   பெண்கள் ஆடை மாற்றக்கூடிய trial டிரெஸ்ஸிங்  ரூம் உள்ளே துணி மாற்றும் பெண்களை ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருக்கும் கடை முதலாளி பிடிபட்டு அதன் விளைவாக ஏற்படும் பிரச்சனைகள்,படம் பார்பவர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது.பொது இடத்தில் கிடைக்ககூடிய கைகள் படம் பார்பவர்களுக்கு,யார் இதை செய்கிறார்கள் ஏன் இதை செய்கிறார்கள் என ஆர்வத்தை தூண்டு கிறது.படத்தின் கதை அருமை ,